Saturday, July 27, 2024
HomeTamilசிறைச்சாலைகளில் தடுப்பூசி திட்டம்!!!

சிறைச்சாலைகளில் தடுப்பூசி திட்டம்!!!

கொழும்பு சிறைச்சாலைகளில் தட்டம்மை நோய் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இந்நோயினால் பாதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, அண்மைய நாட்களில் மகசின் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளிலும் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட கைதிகள் பதிவாகியுள்ளனர்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 30 கைதிகள் தற்போது வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இந்நோய் பரவுவதை தடுக்கும் வகையில் சிறைச்சாலையில் தடுப்பு ஊசி போடும் திட்டத்தையும் சிறைச்சாலை திணைக்களம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

சிறைத்துறை அதிகாரிகளின் விருப்பப்படி உரிய தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular