Saturday, July 27, 2024
HomeTamilபெண்ணொருவர் சடலமாக மீட்பு!

பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

புஸ்ஸல்லாவையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கணினி பொறியியலாளரான அவரது கணவரை கைதுசெய்துள்ளதாக மிரிஹான காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நுகேகொடை – விஜேராம பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த வேளையில் விசாரணைக்காக இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

எல்பொட – கட்டுகித்துல பகுதியைச் சேர்ந்த சதாசிவம் நிரஞ்சலா என்ற 25 வயதான பெண் புஸ்ஸல்லாவ – சோகம தோட்டப்பகுதியில் உள்ள புதரொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் (4) சடலமாக மீட்கப்பட்டார்.

கயிறு போன்றவற்றால் கழுத்தை நெரித்து அவர் கொல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசாரணைக்காக கைது செய்யப்பட்ட நபர் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் இருவரும் களுபோவில பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்ததாகவும் காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த தம்பதியினர் கொழும்பில் இருந்து கட்டுகித்துல பகுதிக்கு சென்றிருந்தபோது, புஸ்ஸலாவை நகரில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பின்னர் சந்தேகநபர் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular