யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான வியாஸ்காந்த் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவனான வியாஸ்காந்த் இலங்கை பிரிமியர் லீக் தொடரில் யாழ்ப்பாண அணிக்காக விளையாடி வருகின்றார்.
கடந்த முறை நடைபெற்ற இத் தொடரில் இவரின் திறமைகளைப் பார்த்த பலரும் தேசிய அணியில் உள்வாங்கப்பட வேண்டுமென கோரிக்கைகளை முன் வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் பங்களாதேஷில் இடம்பெற்ற பிரீமியர் லீக் தொடரில் ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலைமைகளின் மத்தியிலும் இலங்கை அணியில் விளையாடுவதற்காக தொடர்ந்தும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் நெற் பந்து வீச்சாளராக வியாஸ்காந்த் இணைக்கப்பட்டுள்ளதாகவும் சில நாட்களில் இந்தியா செல்லவுள்ளாதாவும் தெரிவித்துள்ளார்
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com