ரக்வானை சிறுவர் இல்லத்திலுள்ள யுவதிகள் மற்றும் சிறுவர்களை அவ்வப்போது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரல்மடுல்ல நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர், தற்போது அப்பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் என்றும், இவர் சிறுவர் இல்லத்தினது பராமரிப்பாளர் ஒருவரின் கணவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொடகவெல பிரதேச செயலகத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இரத்தினபுரி காவல்துறையினரால் கடந்த 24 ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் 11 யுவதிகள் மற்றும் சிறுவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்கள், சிறுமிகள் வயது பூர்த்தியடைந்தவுட நிர்வாகியின் வீட்டுக்கு அழைத்துச்சென்று பாடசாலைக்கு அனுப்பப்படுபவர்களே இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக கூறப்படும் சிறுமியொருவர் குறித்த சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்துள்ளார்.
அவர் தற்போது கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவலதுறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே அவரது கணவரால் இவ்வாறு பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து அரச சார்பற்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சிறுவர் இல்லத்தின் பராமரிப்பாளரான, சந்தேகநபரின் மனைவி பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாரென தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com