Saturday, July 27, 2024
HomeTamilகுழந்தைகளின் கண் முன்னே ஆற்றில் குதித்த தாய்!

குழந்தைகளின் கண் முன்னே ஆற்றில் குதித்த தாய்!

பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 குழந்தைகளை பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தெடர்பில் தெரிய வருகையில்,

பலாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் பெண் எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல், 9 வயது மகனையும், 1 வயது மற்றும் 6 மாதங்களேயான பெண் குழந்தையையும் அழைத்துச் சென்று பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு, குறித்த பெண் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து நீரில் குதித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

நீர்த்தேக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அருகில் நின்ற இளைஞர் ஒருவர் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

குறித்த பெண் தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளையும் அளுத்கம காவல் துறையினர் அழைத்து வந்துள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பானங்களையும் காவல் துறையினர் வழங்கியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular