நேற்று (7) மாலை கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய பலத்த காற்றுடன் வீழ்ந்த மரங்களை அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
மரங்கள் வேரோடு சாய்ந்ததால் கொழும்பில் பல பிரதான வீதிகள் மற்றும் துணை வீதிகள் தடைப்பட்டதாகவும், இந்த மரங்கள் நேற்றிரவு அகற்றப்பட்டதாகவும் கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் மட்டும் 32 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக நேற்று இரவு கொழும்பு வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதேவேளை, பதுளை – கொழும்பு பிரதான வீதி ஹப்புத்தளை பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், வீதியை சீராக்கி போக்குவரத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருதானை பிரதேசத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் தடைப்பட்டிருந்த களனி பள்ளத்தாக்கு ரயில் சேவையும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே அறிவித்துள்ளது.