இணையம் ஊடாக சுமார் 30 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 39 சீன பிரஜைகள் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று (2) களுத்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/03/100791.jpg)
சீன தூதரகத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், நேற்று முன்தினம் அளுத்கம – களுவாமோதர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த பெப்ரவரி மாதம் சுற்றுலா விசாவில் இலங்கை வந்த குறித்த 39 சீன பிரஜைகளில் 5 பெண்களும் 6 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/04/0_lzeqomd6_d5K07cX.jpg)
இணையதளம் மூலம் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்களின் வங்கிக் கணக்குகளில் 30 கோடி ரூபா வரை இவர்கள் மோசடி செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த சீன பிரஜைகள் கைது செய்யப்பட்ட போது, அவர்களிடம் இருந்து 34 மடிக்கணினிகள், 120 விலையுயர்ந்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.