கடும் உஷ்ண நிலைமையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் சூரிய ஒளி நேரடியாக படுவதை தவிர்ப்பதுடன், தேவையான அளவு தண்ணீரை எடுத்துக்கொள்ளுமாறு போஷாக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/04/23-6429c73941883.webp)
மேலும், உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் உணவு வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ளுமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.