Saturday, July 27, 2024
HomeTamilஇங்கிரியவில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு!!

இங்கிரியவில் இடம்பெற்ற விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழப்பு!!

இங்கிரியவில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இங்கிரிய குரான சந்தியில் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளின் கட்டுப்பாட்டை இளைஞன் இழந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், பின்சென்ற பயணியும் படுகாயமடைந்த நிலையில் ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த 15 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ஹந்தபாங்கொட பகுதியைச் சேர்ந்தவராவர்.

சடலம் தற்போது ஹொரண வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இங்கிரிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular