காலி–கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில் இராணுவப் பேருந்து மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (5) இடம்பெற்ற இந்த விபத்தில் 70 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இராணுவ பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.