Saturday, July 27, 2024
HomeTamilமது போதையில் பாடசாலைக்கு சென்ற மாணவி!!

மது போதையில் பாடசாலைக்கு சென்ற மாணவி!!

கெகிராவ பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயது மாணவி ஒருவர் நேற்று (17) மதுவருந்தி விட்டு பாடசாலைக்கு சென்ற நிலையில் மாணவியை கைது செய்த காவல்துறையினர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது சந்தேகம் கொண்ட காவல்துறையினர் மாணவியிடம் விசாரணை நடத்திய போது அவர் மது அருந்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் மாணவியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று, பாடசாலை அதிபரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தொடர்பு கொள்ள முயற்சி செய்த போது பாடசாலையில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது மாணவியின் தாத்தாவே தன்னை மது பழக்கத்திற்கு அடிமையாக்கியதாக தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular