Saturday, July 27, 2024
HomeTamilகைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு மீட்பு!

கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு மீட்பு!

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு குளப்பகுதியை அண்டிய காட்டுபகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றை நேற்று (23) விசேட அதிரடிப்படையினர் மீட்டு செயலிழக்க வைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று 81 ரக மோட்டார் குண்டை விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்டு நீதிமன்ற அனுமதியை பெற்று அதனை அந்த இடத்தில் வெடிவைத்து செயலிழக்க செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular