Saturday, July 27, 2024
HomeTamilஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கெதிரான மனு ஒத்திவைப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கெதிரான மனு ஒத்திவைப்பு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவல்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேலதிக பரிசீலனைகளுக்காக நாளை வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் டி.என். சமரகோன் ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த மனு மீதான மேலதிக பரிசீலனை நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular