நபரொருவரை தலைக்கவசத்தால் தாக்கிக் கொலைசெய்த குற்றச்சாட்டில் 16 வயதுடைய மூன்று இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக வெலிப்பன்ன காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வலேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரங்க விராஜ் என்ற 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெலிப்பன்ன, கல்மத்த பிரதேசத்தில் நேற்று (14) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோது , 16 வயதுடைய இளைஞர்கள் சிலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் அளுத்கம பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com