Friday, July 26, 2024
HomeTamilகாதலியை பார்க்க அரச பேருந்தில் சென்ற நடத்துனர்!

காதலியை பார்க்க அரச பேருந்தில் சென்ற நடத்துனர்!

அரச பேருந்தில் காதலியை பார்க்கச் சென்று, விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் பேருந்து நடத்துனர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த பேரூந்து ரம்புக்கன – ஹதரலியத்த வீதியில் இயங்கும் பேரூந்து என்பதுடன், மறுநாள் அதிகாலை 5.30 க்கு ரம்புக்கனை நோக்கி பயணத்தை ஆரம்பிப்பதற்காக ஹதரலியத்த பேருந்து நிலையத்தில் இரவு வேளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சாரதியின் வீடு அருகாமையில் அமைந்துள்ளதால் தினமும் பேருந்தை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாலும் நடத்துனர் பேருந்திலேயே தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த நடத்துனர், ஹசரலியத்த பேருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் தரிக்கப்பட்டிருந்த ரம்புக்கனை டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பேருந்தை, தனது காதலியைப் பார்ப்பதற்காக 9 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கெபெல்லவத்த என்ற பிரதேசத்துக்கு ஓட்டிச் சென்று, மீண்டும் திரும்பிய போது விபத்தை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

எனினும், விபத்தின் பின்னர் பேருந்தை மீண்டும் ஹதரலியத்த பேருந்து தரிப்பிடத்திற்கு ஓட்டிச் சென்று அதனை நிறுத்திவிட்டு குறித்த நடத்துநர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular