Saturday, July 27, 2024
HomeTamilஇலங்கை மருத்துவ மாணவரின் மரணம் தொடர்பில் பெலாரஸ் காவல்துறையினர் விசாரணை

இலங்கை மருத்துவ மாணவரின் மரணம் தொடர்பில் பெலாரஸ் காவல்துறையினர் விசாரணை

பெலாரஸிலுள் க்ரோட்னோ அரச மருத்துவ பல்கலைக்கழகத்தின் 24 வயதுடைய இலங்கை மருத்துவ மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெலாரஸ் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை மாணவர் தனது பல்கலைக்கழக விடுதி அறைக்குள் கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி இறந்து கிடந்துள்ளார்.

dead body

இலங்கையைச் சேர்ந்த சக மாணவர்கள், அவர்களது தொலைபேசி அழைப்புகளுக்கு குறித்த மாணவன் பதிலளிக்காததால், அவரது விடுதி அறைக்குச் சென்று பார்த்தபோது அவரது உடலைக் கண்டுள்ளனர்.

அறிக்கைகளின்படி, இறந்தவரின் கழுத்தில் ஒரு கயிறு கட்டப்பட்டிருப்பதையும், அதன் மறுமுனை அறைக்குள் ஒரு அலமாரியில் கட்டப்பட்டிருப்பதையும் மாணவர்கள் அவதானித்துள்ளனர்.

இலங்கை மருத்துவ மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மரணத்திற்கு வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து பெலாரஸ் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டியில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலையொன்றின் பழைய மாணவனும் பெலாரஸில் உள்ள Grodno அரச மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் வருட மாணவனுமான திஷான் குலரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular