12 வயதிற்குட்பட்ட அனைத்து சிறுவர்களும் எதிர்வரும் 03 ஆம் திகதி இலவசமாக மிருகக்காட்சி சாலையை பார்வையிட முடியும் என தேசிய விலங்கியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய விலங்கியல் திணைக்களத்தின் 87 ஆவது வருட நிறைவை முன்னிட்டு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் தேசிய மிருகக்காட்சி சாலையில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்தோடு சிறுவர்களை மையமாகக் கொண்டு பல்வேறு அறிவுசார்ந்த வேலைத்திட்டங்கள் எதிர்வரும் 03 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.