செல்லுபடியாகாத விசாவுடன் இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களின் தகவல்களை சேகரிக்கும் வேலைத்திட்டத்தை இன்றும் நாளையும் முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட 3 சிரேஷ்ட அதிகாரிகளுக்கும், இஸ்ரேலிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இதன்போது, செல்லுபடியாகாத விசாவுடன் அங்கு தங்கியுள்ள இலங்கையர்களின் விசாவை புதுப்பிப்பதற்கு நடடிவக்கை எடுக்குமாறு இஸ்ரேலிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இஸ்ரேலின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர், காலாவதியான விசாவுடன் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை கோரியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.