Saturday, July 27, 2024
HomeTamilபணிக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை! அதிரடி அறிவிப்பு!!

பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை! அதிரடி அறிவிப்பு!!

இன்று பணிக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, எரிபொருள் விநியோகத்திற்கு தடை ஏற்படுத்தும் மற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஊழியர்கள் ஆகியோரை இவ்வாறு கட்டாய விடுமுறையில் அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபன வளாகம், களஞ்சியசாலை முனையம் என்பனவற்றுக்குள் நுழைவதற்கும், அவ்வாறானவர்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஏனைய ஊழியர்கள் ஊடாக, எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கனியவளக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், கனியவள கூட்டுத்தாபன தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள போராட்டம், தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக, பொதுஜன முற்போக்கு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular