அண்மைக்காலங்களில் பதிவான சர்ச்சைக்குரிய 6 மரணங்களில் 2 மரணங்கள் மருந்து ஒவ்வாமையால் ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த மரணங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அங்கத்தவர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
கண்டி, பேராதனை, கேகாலை, றாகமை, பாணந்துறை மற்றும் தேசிய கண் வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் பதிவான சர்ச்சைக்குரிய மரணங்கள் தொடர்பில் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.