Saturday, July 27, 2024
HomeTamilதேர்தலுக்கான திகதி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

தேர்தலுக்கான திகதி தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி தொடர்பில் தீர்மானிப்பதற்கான கூட்டம் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதி தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் புதிய திகதி தொடர்பில் அடுத்த வாரம் கலந்துரையாடி தீர்மானிக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தடுத்து வைத்திருப்பதனை ரத்து செய்து திறைசேரி செயலாளருக்கு உயர்நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு உட்படுத்துவதற்கும் இன்று நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

குறித்த மனு பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக்க டி சில்வா, மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular