Friday, July 26, 2024
HomeTamilபொலன்னறுவை டிப்போக்களுக்கு புதிய பேரூந்துகள் விநியோகம்!!

பொலன்னறுவை டிப்போக்களுக்கு புதிய பேரூந்துகள் விநியோகம்!!

இந்தியக் கடனுதவியின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) வழங்கப்பட்ட புதிய பேரூந்துகளின் விநியோகத்தின் மற்றுமொரு கட்டம் அண்மையில் பொலன்னறுவையில் இடம்பெற்றது.

Website for long distance journeys in buses

75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராமப்புறங்களில் பொது போக்குவரத்தை வலுப்படுத்துவதற்காக இந்த ஆண்டு 500 புதிய பஸ்களை இயக்கவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி பொலன்னறுவையில் உள்ள இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு 15 புதிய பேரூந்துகள் அமைச்சர் வழங்கி வைத்தார்.

Bandula Gunawardane

இந்த நாட்டின் அரசியலில் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக அனைவராலும் மதிக்கப்படும் அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சுப் பதவிகளை வகிக்கும் போதெல்லாம் இன்று என்பதை விட நாளையை நினைக்கும் அமைச்சராக செயற்பட்டதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.

இரண்டும் ஒரே அமைச்சின் கீழ் இருப்பதால், கடினமான வீதிகளுக்கு புதிய பேரூந்துகளை அனுப்பும் மற்றும் அத்தகைய வீதிகளை சீரமைக்கும் திட்டம் ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular