Saturday, July 27, 2024
HomeTamilபொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!!

பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!!

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது, ஆனால் கடந்த சில வாரங்களில் அது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் இதுவரையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 65,000ஐ தாண்டியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் 31,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழித்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular