பண்டாரவளையிலுள்ள பாடசாலை ஒன்றின் சுமார் 30இற்கும் அதிகமான மாணவர்கள் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவு விஷமடைந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் பண்டாரவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.