Saturday, July 27, 2024
HomeTamilIMF பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்!!

IMF பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று கலந்துரையாடல்!!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.

முதலாம் கட்ட மதிப்பாய்வுக்காக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் அண்மையில், நாட்டை வந்தடைந்தனர். அவர்கள், நாட்டில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பான இறுதி கலந்துரையாடலாக இந்த சந்திப்பு அமையவுள்ளது.

அதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை இலங்கை, பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular