மொனராகலை புத்தல பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 11.20 அளவில், ரிச்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியுட்டாக பதிவாகியுள்ளது.
மொனராகலை மற்றும் படால்கும்பர ஆகிய பகுதிகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.