Saturday, July 27, 2024
HomeTamilமருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க முடியும்!!

மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க முடியும்!!

இரண்டு மாதங்களுக்குள் மருந்துப் பற்றாக்குறையைப் போக்க தேவையான கொள்வனவுகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவசரகால நிலைமைகளின் கீழ் சுமார் 160 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

பொதுவாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 6 மாதங்கள் ஆகும் எனவும் எனவே அவசரகால கொள்வனவுகளை நடைமுறைப்படுத்தி செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறைந்தது இரண்டு மாதங்களுக்குள் இந்த மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

புற்றுநோய்க்கு தேவையான 65 வகையான மருந்துகள் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டுமே தற்போதைய பொருளாதார முறைக்கு ஏற்ப இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்த நிலைமையை முக்கியமாக பாதித்துள்ளது என்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

சுமார் 350 வகையான மருந்துகள் உள்ளுர் உற்பத்தியாளர்களினால் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்த சமன் ரத்நாயக்க மேலும் 100 வகையான மருந்துகளை இந்த வருட இறுதிக்குள் உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளதாக மேலும் தெரிவித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் 80 முதல் 100 வரையிலான தரமற்ற (quality failure)மருந்துகள் இருப்பதாகவும், உலகின் பிற நாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் அவர் மேவலும் குறிப்பிட்டிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular