ஏப்ரல் 30 ஆம் திகதி வரை சோலர் பெனல் வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவு நிலுவைகளையும் செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
கடந்த 12 மாதங்களாக 4 பில்லியன் ரூபா நிலுவை உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழங்குநர்கள், IPP கள் மற்றும் பிற வழங்குநர்களுக்கான ஏனைய அனைத்து கட்டண நிலுவைகளையும் CEB தொடர்ந்து செலுத்தும் என்றும், மாதாந்த கட்டணத் திட்டத்தில் அடுத்த ஆறு மாதங்களுக்குள் அவற்றை முழுமையாகத் தீர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.