2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியன்று சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் உயிரிழந்தவர்களில் சாரா ஜஸ்மினும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனும் அடங்குவதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது முறையாக பெறப்பட்ட நுண்ணிய மாதிரிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2023/03/FsZDDgIaYAE7KhF-652x1024.jpg)