Saturday, July 27, 2024
HomeTamilவெள்ள அபாயம் எச்சரிக்கை!

வெள்ள அபாயம் எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஏனைய மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணி முறிப்பு குளத்தின் 9 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த பகுதியை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular