Friday, July 26, 2024
HomeTamilஇலங்கையில் உணவு பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் முன்னேற்றம் – ஐ.நா

இலங்கையில் உணவு பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் முன்னேற்றம் – ஐ.நா

இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமும் இணைந்து மேற்கொண்ட பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு பணி அறிக்கையின்படி, இலங்கையில் 3.9 மில்லியன் மக்கள் அல்லது சனத்தொகையில் 17 வீதமானவர்கள் மிதமான நிலையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை கடந்த ஆண்டு ஜூன்/ஜூலையில் இருந்து கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைந்துள்ளது.

இதேவேளை கிட்டத்தட்ட 10,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர், இது கடந்த ஆண்டு 66,000 பேராக இருந்தது.

உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றம் சிறந்த உணவு நுகர்வில் இருந்து உருவாகிறது என ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. இது உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடை காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது.

நேர்மறையான போக்கு இருந்தபோதிலும், சில மாவட்டங்களில் குறிப்பாக கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவற்றில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது.

தோட்டத் துறையில் உள்ள தேயிலைத் தோட்ட சமூகங்களுக்குள்ளும், சமுர்த்தி போன்ற சமூக உதவித் திட்டங்களை நம்பியிருக்கும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியிலும் மிக உயர்ந்த அளவிலான கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை காணப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular