தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
![Gajendrakumar Ponnambalam](https://lankanvibe.com/wp-content/uploads/2023/06/22-62fde575e55ea.png)
கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல் நிலையத்தில் இன்றைய தினம் முன்னிலையாகுமாறு தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தான் கொழும்பிற்கு பிரவேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மருதங்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகும் வரை அவருக்கு இத்தடையை விதிக்குமாறு காவல்துறையினர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இதனை பரிசீலித்த கிளிநொச்சி நீதவான், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாட்டு பயணத் தடையை விதித்து உத்தரவிட்டுள்ளார்.