இலங்கை போக்குவரத்து சபையின் திவுலபிட்டிய டிப்போவிற்கு சொந்தமான பேரூந்து சாரதி ஒருவர் மீது மினுவாங்கொடை பஸ் நிலையத்தில் வைத்து சிறுநீர் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து மினுவாங்கொடை நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் பயணிகளை ஏற்றிக் கொள்வதற்காக மினுவாங்கொடை பேரூந்து நிலையத்தில் பேரூந்தை நிறுத்திய போது குருநாகல் நோக்கி சென்று கொண்டிருந்த பேரூந்து சாரதி ஒருவர் சிறுநீர் வீசி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியார் பேருந்தின் சாரதி போத்தலில் சிறுநீரை எடுத்துச் சென்று இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், பேரூந்தில் இருந்த பயணிகளும் சிறுநீரால் நனைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பயணிகளை ஏற்றிச் செல்லும் போது இரு சாரதிகளுக்கு இடையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் தகராறு காரணமாகவே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது, இது தொடர்பில் மினுவாங்கொடை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.