தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீடிப்பதற்கும் தேர்தலுக்கான அபராதத் தொகையை அதிகரிப்பதற்குமான ஏற்பாடுகளை வழங்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 262), 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம், 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டம் மற்றும் 1988 இல 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய வர்த்தமானி முன்மொழிகிறது. .