Saturday, July 27, 2024
HomeTamilஅனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்துகளை தேடி சுற்றிவளைப்பு !

அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்துகளை தேடி சுற்றிவளைப்பு !

அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை கண்டறிவதற்காக விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்காக 4 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவை – மன்னம்பிட்டி பாலத்தில் இருந்து பேருந்தொன்று ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்திற்குள்ளானதையடுத்து இந்த நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் 40இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular