சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, கிளிநொச்சி, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர், சட்டத்தரணி புத்திக இத்தமல்கொட தெரிவித்துள்ளார்.
சிவப்பு நாடு அரிசிக்கு உரிய விலையொன்று சந்தையில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.