Saturday, July 27, 2024
HomeTamilசுகாதார பணியாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

சுகாதார பணியாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்காலத்தில் தாமும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக ஐக்கிய சுகாதார பணியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அதன் பொதுச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் பல துறைகளை சார்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து மார்ச் 08ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகி வருகின்றன.

அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்றைய தினம் சுமார் 40 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.

தங்களின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க, தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கியுள்ளன.

இந்தநிலையில், அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, நாளை மதியம் தங்களது வேலைத்தளத்துக்கு முன்பாக கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த தொழிற்சங்கங்களின் இணைப்பாளர்களான தம்மிக்க முனசிங்க, ஜோசப் ஸ்டாலின் மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தினர்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular