Saturday, July 27, 2024
HomeTamilமின்சார கார்கள் இறக்குமதி!!

மின்சார கார்கள் இறக்குமதி!!

எதிர்வரும் காலத்தில் அனுமதி கிடைக்கும் சகல சந்தர்ப்பங்களிலும் மின்சார கார்களை மட்டுமே இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும் ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணித் தொகைக்கு ஏற்ப மின்சார கார்களை இறக்குமதி செய்யும் வசதியை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களுக்கு, முன்னதாக, கடந்த 2022 மே மாதம் முதல் 2022 டிசம்பர் 31 ஆம் திகதி வரை மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியால் நாடு படுகுழியில் விழுந்தபோது, நாட்டின் குறைந்துபோன அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் முயற்சியில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாக அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular