கொழும்பு நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாதத்தில், சிறு அளவிலான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (31) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கடந்த செப்டெம்பர் மாதம் 1.3 சதவீதமாக இருந்த முதன்மைப் பணவீக்கம், இந்த மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அதேநேரம் செப்டெம்பர் மாதம் மறை 5.2 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம், ஒக்டோபர் மாதமும் மாற்றமின்றி அவ்வாறே தொடர்வதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவல்லாப் பணவீக்கம், கடந்த செப்டம்பர் மாதம் 4.7 சதவீதமாக இருந்த நிலையில், அது இந்த மாதத்தில் 4.9 சதவீதமாக பதிவாகியுள்ளது.