ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனையும் சுமந்திரனையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர்.
தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற தமிழ் தேசிய பிரச்சினை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் இன்னமும் இரத்துச் செய்யப்படாமல் இருப்பது போன்ற பல விடயங்கள் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.