வௌிநாட்டு பணியாளர்களுக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் தீர்வை வரிச் சலுகை நேற்று(01) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐந்து கட்டங்களின் கீழ் இந்த வரிச் சலுகை பெற்றுக் கொடுக்கப்படுவதாக தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
![Manusha Nanayakkara](https://lankanvibe.com/wp-content/uploads/2023/04/manusha-nanayakkara-DAILY-CEYLON.png)
2400 முதல் 4799 டொலர் வரை அனுப்பும் வௌிநாட்டு பணியாளர்களுக்கு 600 டொலர் மேலதிக தீர்வை வரிச் சலுகை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.
4800 முதல் 7199 டொலர் வரை அனுப்பிவைப்போருக்கு 960 டொலர் மேலதிக தீர்வை வரிச் சலுகை பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.