சீரற்ற காலநிலையால் மீன்பிடியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே தற்போது கோழி இறைச்சியின் விலை உயர்வதற்கு காரணம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு கிலோ மீனின் விலையானது 3000 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத்தின் கேள்விக்கு பதிலளித்த அவர், மீன்பிடி குறைவடைந்ததன் விளைவாக அதிக தேவை காரணமாக கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிக தேவைக்கு ஏற்ப கோழி இறைச்சி உற்பத்தி அதிகரிக்கவில்லை.கோழியின் விலையை அதிக அளவில் உயர்த்துவது நியாயமற்றது.விரைவில் கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
முட்டை உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்புவதால், மூன்று மாதங்களுக்குள் முட்டை தட்டுப்பாடும் தீர்க்கப்படும் என தெரிவித்தார்.