இம்மாதம் முதல் 15 நாட்களில் 77,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, ஒகஸ்ட் மாதத்தில் இதுவரை 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
ஒகஸ்ட் மாதத்தில் 15,133 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றது.
இதற்கிடையில், SLTDA ஆனது ஐக்கிய இராச்சியத்திலிருந்து 9,852, சீனாவில் இருந்து 5,491, ஜேர்மனியில் இருந்து 4,810, பிரான்சிலிருந்து 4,370, ரஷ்யாவில் இருந்து 3,672, இத்தாலியில் இருந்து 3,577, ஸ்பெயினிலிருந்து 2,809, அவுஸ்திரேலியாவில் இருந்து 2,713 மற்றும் இலங்கையில் இருந்து 2,638 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் மொத்தம் 143,039 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை 845,465 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.