செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 2129 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
07 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அறுபத்து நான்காயிரத்து ஏழு ஆகும்.
தற்போது பெய்து வரும் மழையினால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.