கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்ற போதிலும், தடையின்றி நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் போதிய மழைவீழ்ச்சி கிடைக்கவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகள் இன்னும் நீண்டகால வரட்சியை எதிர்கொள்வதாக சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைவாக மொனராகலை, பிபிலை, அம்பாறை மற்றும் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் நாளாந்தம் நீர்வெட்டுகளை அனுபவித்து வருகின்றனர்.
எனவே பொதுமக்களை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு சபை கேட்டுக்கொண்டுள்ளது.