கடந்த ஜூன் மாதத்தில் ஒரு இலட்சத்து 388 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இது கடந்த மே மாதத்தை காட்டிலும், ஜுன் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 24 ஆயிரத்து 874 ஆக அதிகரித்துள்ளது.