மூன்று மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட எச்சரிக்கை மாலை 6.30 மணி வரை அமுலில் இருக்கும்.
![](https://lankanvibe.com/wp-content/uploads/2022/12/land-slide-11.07.2021.jpg)
களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பகுதிகளிலும், மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர பிரதேச செயலகப் பகுதியிலும், இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட மற்றும் கிரியெல்ல பிரதேச செயலகப் பகுதிகளிலும் வசிப்பவர்களுக்கு 2ஆம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆறு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.