Friday, July 26, 2024
HomeTamilசட்டக்கல்லூரி பரீட்சை வர்த்தமானி - பாராளுமன்றத்தில் தோல்வி!!

சட்டக்கல்லூரி பரீட்சை வர்த்தமானி – பாராளுமன்றத்தில் தோல்வி!!

சட்டக்கல்லூரி பரீட்சையை ஆங்கில மொழியில் மாத்திரம் நடாத்துவதற்கான சட்ட ஒழுங்குமுறைகளை கொண்டு வருவதற்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு வாக்கெடுப்பு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரினார்.

அதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகள் கிடைத்தன. ஆதரவாக ஒரு வாக்கு மாத்திரமே கிடைத்துள்ளது.
இதில் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாத்திரம் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

இதற்கிணங்க வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இருந்து வாபஸ் பெறப்பட்டு இரத்துச் செய்யப்பட்டது.

இதையடுத்து, சட்டக்கல்லூரி பரீட்சை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தொடர்ந்தும் நடைபெறும்.

மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular