Saturday, July 27, 2024
HomeTamilசிறுவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு !!

சிறுவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு !!

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளின் கல்லீரல் பாதிப்பை தடுப்பதற்கு பெற்றோர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சலிலிருந்து மீண்ட சிறுவர், சிறுமிகள் மீண்டும் கடுமையான வேலையில் ஈடுபடுத்தினால், கல்லீரலில் பாதிப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

“டெங்கு குணமானதும் ஓரிரு வாரங்களுக்கு, சிறுவர், சிறுமிகளுக்கு அதிக உடல் உழைப்பை கொடுக்காதீர்கள். கல்லீரல் பாதிக்கப்பட்டால், மூளையை பாதிக்கும். எனவே, டெங்குவை இலகுவாக எடுத்துக்கொள்ளாதீர்கள். டெங்கு வந்தால் சிக்கல்கள் வரலாம்.”

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 40 சிறுவர்கள் தற்போது லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Dengue
Dengue

அறிகுறிகள் இருந்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் இரத்த பரிசோதனை செய்யுங்கள்.குறைபாடு இருந்தால். வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள், இரத்த தட்டுக்கள் சுமார் 150 ஆக குறைந்துள்ளது. மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.” என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெங்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular