நாட்டில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய 22 கரட் தங்கம் ஒரு பவுண் நேற்றைய தினம் ஒரு இலட்சத்து 62 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் ஒரு இலட்சத்து 52 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அத்துடன் நேற்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 75 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு https://lankanvibe.com